ஆரம்பமாக முஸ்லீம்களின் விடயங்கள் மீதுள்ள உங்களின் ஆர்வம் மற்றும் அவர்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் விடயங்கள் (தவிர்ந்து கொள்ள வைப்பதற்காக) பற்றிய அறிவை பெறுதல் போன்ற தன்மைகளுக்காக நன்றி கூறுகிறோம்.
மேலும் நீங்கள் முன்வைத்த கேள்விக்கான பதிலை தெளிவாக ஏன் கொஞ்சம் அதிகமாகவே தருவதில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். சிலவேளைகளில் அது உங்களை ஒரு பெரும் நலவின்பால் இட்டுச்செல்லும்.
வலம் பொருத்திய இஸ்லாமிய ஷரீஅத்தின் கண்ணியம் யாதெனில், நன்மை பயக்கும் விடயங்கள் சொற்பமோ அதிகமோ அவற்றை காட்டித்தருவதோடு எம்மை நடைமுறை படுத்துமாறு பணிக்கும், அவ்வாறு தீமை பயக்கும் விடயங்கள் சொற்பமோ அதிகமோ அவற்றை விட்டு நம்மை எச்சரிப்பதுடன் முழுமையாக தவிர்க்குமாறு பணிக்கும். இஸ்லாமிய ஷரீஅத்தை பொருத்தவரை எல்லாவிதத்திலும் அழகிய பூரணத்துவம் மிக்க அமைப்பில் காணப்படும்.
இத்தன்மையே முஸ்லிம் அல்லாதவர்களில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.
இணைவைப்பாளர்களில் ஒருவர் ஸல்மான் அல் பாரிஸி (ரழி) அவர்களிடம் "உங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மலசலம் கழிக்கும் முறையிலிருந்து சகல விடயங்களையும் கற்றுத் தந்துள்ளார்கள்." என்று கூறினார். அதற்கு ஸல்மான் அல் பாரிஸி (ரழி) அவர்கள் "ஆம் மலசலம் கழிக்கும் போது நாங்கள் கிப்லாவை முன்னோக்கி இருப்பதையும் தடுத்துள்ளார்கள்" என்று கூறினார்கள். ....
நூல்: திர்மிதி (இல : 16) இமாம் திர்மிதி அவர்கள் "இந்த செய்தி ஹஸன் மற்றும் ஸஹீஹானது மேலும் முஸ்லிம் கிரந்தம் மற்றும் ஏனைய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது" என்று கூறியுள்ளார்.
இஸ்லாமிய ஷரீஅத்தில் மலசலம் கழிக்கும் ஒழுங்குகள் பல இருக்கின்றன.
1- மலசலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்கி இருக்காமல் இருத்தல். (முஸ்லிம்களின் கிப்லா என்பது அல்லாஹ்வின் கட்டளையின் பேரில் இப்ராஹிம் (அலை) கட்டிய மக்கா நகரில் இருக்கும் கஃபாவாகும்)
கிப்லாவை மதிக்கும் முகமாகவும் அல்லாஹ்வின் (இஸ்லாமிய) அடையாளங்களை கண்ணியப்படுத்தும் முகமாகவும் (இது தடை செய்யப்பட்டுள்ளது) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (உங்களில் யாராவது மலசலம் கழிக்க அமரும் போது கிப்லாவை முன்னோக்கி மற்றும் பின்னோக்கி (அமர) வேண்டாம்)
நூல் : முஸ்லிம் (389)
2- சிறுநீர் கழிக்கும் போது தன் பாலுறுப்பை வலது கையால் தொடக்கூடாது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (உங்களில் யாராவது சிறுநீர் கழித்தால் வலது கையால் தன் பாலுறுப்பை பிடிக்க வேண்டாம், வலது கையால் சுத்தம் செய்யவும் வேண்டாம், பாத்திரத்தில் மூச்சு விடவும் (ஊதவும்) வேண்டாம்.) நூல்: புகாரி (150)
3- அழுக்குகளை வலது கையால் சுத்தம் செய்தல் கூடாது, மாறாக இடது கையை பயன்படுத்தல் வேண்டும். அதற்கு ஆதாரமாக மேற்குறிப்பிடப்பட்ட ஹதீஸும் பின்வரும் நபிமொழிகளையும் எடுக்கலாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ( உங்களில் யாராவது அழுக்குகளை நீக்கினால் வலது கையால் நீக்க வேண்டாம்)
நூல்: புகாரி (5199)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவி ஹப்ஸா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் வலக்கையை உண்ணுவதற்கும் பருகுவதற்கும் வுழு செய்வதற்கும் ஆடை அணிவதற்கும் கொடை கொடுப்பதற்கும் பயன்படுத்துவார்கள். தன் இடக்கையை இது தவிர்ந்த ஏனையவற்றுக்கு உபயோகிப்பார்கள்.
நூல்: முஸ்னத் அஹ்மத்//ஸஹீஹுல் ஜாமிஃ (4912)
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ( உங்களில் யாராவது மலசலம் கழித்து விட்டு சுத்தம் செய்தல் வலக்கரத்தால் சுத்தம் செய்ய வேண்டாம், அவரது இடக்கரத்தால் சுத்தம் செய்துகொள்ளட்டும்.) நூல்: ஸுனன் இப்னு மாஜா (308) // ஸஹீஹுல் ஜாமிஃ (322)
4- மலசலம் கழிக்கும் போது அமர்ந்து தரையின் பக்கம் நெருங்கி கழிப்பது நபிவழியாகும். ஏனெனில் அவ்வாறு கழிக்கும் போது உடல் மற்றும் ஆடையில் சிறுநீர் துளிகள் படுவதை விட்டு தவிர்ந்து கொள்ளலாம். அவ்வாறான சந்தர்ப்பம் இல்லையெனில் நின்றுகொண்டு சிறுநீர் கழிக்கவும் முடியும்.
5- மலசலம் கழிக்கும் போது மனிதர்களின் கண்களை விட்டும் மறைத்துக்கொள்ளல் வேண்டும். )நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிடித்த மறைவான இடம் பூமியின் உயர்ந்த இடம் அல்லது பேரீச்சம் தோட்டம்.) நூல்: முஸ்லிம் (517)
அத்துடன் ஓர் வெட்ட வெளியில் ஒருவருக்கு மலசலம் கழிக்க நேர்ந்தால் மறைப்பதற்கும் ஒன்றும் இல்லாத நிலையில் மனிதர்களில் பார்வையில் இருந்து தூரமாக சென்று தனது தேவைகளை நிவர்த்தி செய்வார்.
முகீரதிப்னு ஷுஃபா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் " நான் ஒருதடவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் பிரயாணத்தில் இருந்தேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மலசலம் கழிப்பதற்கு தூரமான இடத்திற்கு சென்றார்கள்."
நூல்: திர்மிதி (20) இமாம் திர்மிதி அவர்கள் இந்த செய்தி ஹஸன் மற்றும் ஸஹீஹானது என்று கூறியுள்ளார்.
அப்துர் ரஹ்மான் பின் அபீ குர்ஆன் (ரழி) அவர்கள் கூறினார்கள் "நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் மலசலம் கழிக்கும் இடத்திற்கு சென்றேன். நபி அவர்கள் மலசலம் கழிக்க நேர்ந்தால் தூர இடத்திற்கு சென்று விடுவார்கள்." நூல்: நஸாஇ (16) // ஸஹீஹுல் ஜாமிஃ (4651)
6- மறைவிடத்தை தரையின் பக்கம் நெருங்கி இருப்பின் வெளிப்படுத்துதல். அதுவே மிக மறைவான விதத்தில் செயல்படுவதாகும்.
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மலசலம் கழிக்கச் சென்றால் தரையின் பக்கம் நெருங்கிய பின்னர்தான் தனது ஆடையை உயர்த்துவார்கள்." நூல் : திர்மிதி (14) ). // ஸஹீஹுல் ஜாமிஃ (4652)
மலசலகூடம் சென்றால் மனிதர்களில் பார்வையில் விட்டு மறைத்து கதவை மூடிவிட்டு தனது ஆடையை உயர்த்த வேண்டும்.
கேள்வி முன்வைத்த நீங்கள் இந்த விடயங்களில் இருந்தும் மேல் குறிப்பிடப்பட்ட விடயங்களிலிருந்தும், மேற்கத்திய நாடுகளில் இருக்கும் பலர் திறந்த இடங்களிலும் பொதுவான மலசலகூடங்களிலும் நின்றவாறு சிறுநீர் கழிக்கும் காட்சி, கண்ணியம், ஒழுக்க விழுமியங்கள், மற்றும் நற்குணத்திற்கும் முரணான செயல் என்பதை புரிந்து கொள்ள முடியும். தெளிவான அறிவுள்ள ஒவ்வொருவரின் உடலும் இச்செயலை கண்டு நடுங்கும். அது எவ்வாறு அல்லாஹ் இரு தொடைகளுக்கு மத்தியில் வைத்து மறைத்தது நம்மையும் மறைக்கும் படி பணித்து தெளிவான சிந்தனையுள்ள அனைவரும் மறைக்க வேண்டும் என்று இருக்கும் போது, மறைவான இடத்தை மக்களுக்கு காட்டுவது.!?
அவ்வாறே திறந்த அமைப்பில் மலசலகூடங்கள் நிர்மாணிப்பது அடிப்படையில் மிகப்பெரும் தவறாகும். இவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட மலசல கூடங்களை உபயோகிப்பவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்க நேரிடும் அதேபோன்று இவ்வாறு வெளிப்படையாக மலசலம் கழிப்பவர்கள் மிருகங்களை விட பின் தங்கியவர்கள் அவர் ஏனெனில் மிருகங்களில் கூட மலசலம் கழிக்கும் பொழுது மறைந்திருத்தல் என்ற வழமை இருக்கிறது.
7- இஸ்லாமியர்களிடம் காணப்படும் ஷரீஅத்தின் ஒழுங்கு முறைகளில் உள்ளது தான் சந்தர்ப்ப துஆக்கள். அதாவது மலசலகூடம் செல்லும் பொழுதும் அதிலிருந்து வெளிவரும் பொழுதும் குறித்த துஆக்களை ஓதுதல் வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எனக்கு மலசலகூடம் செல்லும் பொழுது بسم الله ، اللهم إني أعوذ بك من الخبث والخبائث ، இவ்வாறு கூறும்படி கற்றுத் தந்தார்கள். அதாவது கெட்ட விடயங்களை விட்டும் ஆண் பெண் சைத்தான்களை விட்டும் அல்லாஹ்வைக் கொண்டு பாதுகாப்பு தேடுவது.
மலசல கூடத்தில் இருந்து வெளியேறும் பொழுது غفرانك؛ என்று கூற வேண்டும்.
8- மலசலம் கழித்த பின்னர் அழுக்குகளை நன்கு நீக்கிவிடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறுநீர் கழித்து விட்டு சுத்தம் செய்வதில் பொடுபோக்கு காட்டும் விடயத்தில் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (கப்ரில் அதிகம் வேதனை செய்யப்படுவது சிறுநீர் சுத்தம் செய்யாததால்) நூல்: சுனன் இப்னுமாஜா (343) // ஸஹீஹுல் ஜாமிஃ (1202)
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒரு தடவை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இரண்டு கப்ருகளின் பக்கம் கடந்து சென்ற போது இவ்விருவரும் வேதனை செய்யப்படுகின்றார்கள் (இவ்விருவரும் உங்களது பார்வையில் பெரிய விடயத்திற்காக வேதனை செய்யப்படவில்லை அதில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது மறைக்கவில்லை மற்றும் ஒருவர் கோள் சொல்லிக் கொண்டு திரிந்தவர் என்று கூறினார்கள்) நூல் புகாரி (5592)
9- அழுக்குகளை கழுவும் பொழுது அல்லது துடைக்கும் பொழுது மூன்று விடுத்தம் அல்லது மூன்றுக்கு மேற்படும்படி தேவைக்கேற்ப ஒற்றைப்படையாக கழுவ வேண்டும்.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தனது பின் பகுதியை மூன்று தடவை கழுவுவார்கள் இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள் நாங்களும் அவ்வாறு செய்தோம் அவ்விடத்தை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் பெற்றுக் கொண்டோம். நூல் இப்னு மாஜா (350) // ஸஹீஹுல் ஜாமிஃ (4993)
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் உங்களில் யாராவது அழுக்கை துடைத்தால் ஒற்றைப்படையில் துடைத்துக் கொள்ளட்டும்.) நூல் ; முஸ்னத் அஹமத் // ஸஹீஹுல் ஜாமிஃ (375)
10- அழுக்கு துடைக்கும் பொழுது எலும்புகள் மற்றும் விட்டைகளை உபயோகிக்காமல் இருக்க வேண்டும். நெப்கின்கள் மற்றும் கற்கள் போன்றவற்றை பாவித்தல் வேண்டும்.
அபூஹுரைரா (ரழி) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் வுழு செய்வதற்கான நீரையும் வெளித்தேவைகளை நிவர்த்தி செய்ய தேவையான நீரையும் கொண்ட சிறிய பாத்திரத்தை சுமந்து சென்றார்கள். நபியவர்களை பின்துயர நபியவர்கள் யார் அது என்பதாக கேட்டார்கள் அதற்கு அபூஹுரைரா (ரழி) நான் அபூஹுரைரா என்று கூறினார்கள். பின்னர் நபி அவர்கள் எனக்கு (மலசலம்) அழுக்குகளை துடைப்பதற்கு சிறிது கற்களை கொண்டு வாரும் எலும்புகளையோ விட்டைகளையோ கொண்டு வர வேண்டாம் என்று கூறினார்கள். அபூஹுரைரா ரழி கூறினார்கள் நான் எனது ஆடை ஓரப்பகுதியில் கற்களை சுமந்து கொண்டு வந்து நபியவர்கள் பக்கத்தில் வைத்தேன் பின்னர் அவர்கள் வெளி தேவைகளை முடித்து வரும் வரை காத்திருந்தேன். பின்னர் நபி அவர்களிடம் எலும்புகள் மற்றும் விட்டைகள் உபயோகிப்பதின் நிலை என்ன என்று கேட்டேன் அதற்கு நபி அவர்கள் அவ்விரண்டும் ஜின்களின் உணவு என்றார்கள். நூல்: புகாரி (3571)
11- தேங்கி நிற்கும் நீரில் சிறுநீர் கழிப்பது கூடாது ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தேங்கி நிற்கும் நீரில் சிறுநீர் கழிப்பதை தடுத்தார்கள். நூல்: முஸ்லிம் (423) ஏனெனில் அதில் சிறுநீர் கழிப்பது நீரை மாசுபடுத்தும் அதை உபயோகிப்பவர்களுக்கு தீங்கு ஏற்படும்.
12- மக்களின் நடைபாதையிலும் அதே போன்று மக்கள் நிழல் பெறும் இடத்திலும் சிறுநீர் கழிப்பது கூடாது. அவ்வாறு செய்வது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகும்.
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் மக்கள் சபிக்கும் இரு செயல்களை பகிர்ந்து கொள்ளுங்கள் அதற்கு நபித் தோழர்கள் அந்த இரு செயல்களும் யாவை என்று கேட்க நபி அவர்கள் அதில் ஒன்று மக்களின் நடைபாதையில் மலசலம் கழித்தல் மற்றொன்று மக்களுக்கு நிழல் தரும் இடத்தில் மலசலம் கழித்தல். நூல்: அபூ தாவூத் (23) // ஸஹீஹுல் ஜாமிஃ (110)
13- மலசலம் கழிக்கும் போது ஒருவர் மற்றவருக்கு சலாம் கூறுவதோ அதற்கு பதில் கூறுவதோ கூடாது காரணம் அழுக்குகள் நிறைந்த இடத்தில் அல்லாஹ்வின் பெயர் கூறப்படக்கூடாது என்பதற்காக.
ஜாபிர் பின் அப்துல்லா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் ஒரு தடவை ஒரு மனிதர் நபி அவர்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும் பொழுது சலாம் சொல்லிச் சென்றார் அதற்கு நபி அவர்கள் என்னை நீ இந்நிலையில் கண்டால் சலாம் கூற வேண்டாம் ஏனெனில் நான் உனக்கு பதில் கூற மாட்டேன். என்று கூறினார்கள். நூல்: இப்னு மாஜா (346) // ஸஹீஹுல் ஜாமிஃ (575)
பெரும்பான்மை அறிஞர்கள் மலசல கூடத்தில் தேவையின்றி கதைப்பதை வெறுக்கத்தக்கது என்று கூறியுள்ளனர்.
இவையே இத்தலைப்பில் இஸ்லாமிய மார்க்கம் கொண்டு வந்த சில சட்ட திட்டங்களும் ஒழுக்க விழுமியங்களும். ஒரு மனிதனுக்கு அன்றாடம் ஏற்படும் விடயங்களில் இஸ்லாமிய மார்க்கம் இவ்வாறு கவனித்து பல தெளிவுகளை வழங்கி இருக்கிறது என்றால் இதைவிட முக்கியமான பல அம்சங்களில் மார்க்கம் எந்த அளவு தெளிவுகளை வழங்கி இருக்கிறது என்று நீங்கள் சிந்தித்தீர்களா? கேள்வியை முன்வைத்த நீங்கள் இந்த உலகில் இந்த இஸ்லாமிய மார்க்கத்தை போன்று எந்த மார்க்கமாவது இவ்வாறான விடயங்களை கொண்டு வந்துள்ளதா? அல்லாஹுத்தஆலா இந்த மார்க்கத்தின் பூரணத்துவத்தையும் அழகையும் அதை கடைபிடிக்க வேண்டிய கடமைப்பாட்டையும் உறுதிப்படுத்துவதில் போதுமானவன்.
அல்லாஹ்விடத்தில் உங்களுக்கும் எங்களுக்கும் நலவையும் நேர்வழியையும் அல்லாஹ்விடம் கேட்கிறோம்.